ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்துவிட்டு கலவையை தனியே வைக்கவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும் ரவை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும்.
வறுத்த ரவையுடன் தாளித்த கலவை மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து கலக்கவும் அதனுடன் தயிர் மற்றும் பெருங்காயத்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து கலக்கவும் கலவையுடன் 1 முதல் 2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
தற்போது கலவை கெட்டியாக இருப்பதை காணலாம்.
தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து, இட்லித் தட்டில் ஊற்றி 10 முதல் 12 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்.
சுவையான ரவா இட்லி தயார்.