Ragi Puttu in Tamil | ராகி புட்டு | கேழ்வரகு  புட்டு | Puttu recipe in Tamil | Puttu in Tamil

See this Recipe in English

ராகி புட்டு/ கேழ்வரகு புட்டு சுவையும், ஆரோக்கியமும், நிறைந்த உணவு வகை. இதனை 15 முதல் 20 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம். காலை /இரவு நேர உணவாக அல்லது மாலை நேர சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.  கேழ்வரகு மாவு, நாட்டு சர்க்கரை, தேங்காய், ஆகியவற்றை கொண்டு செல்வதால் ஆரோக்கியம் நிறைந்த  அதே சமயத்தில் சுலபமான முறையில் செய்யக்கூடிய உணவு. 

 சுவையான ராகி புட்டு செய்ய சில குறிப்புகள்

  • கடைகளில் வாங்கிய ராகி மாவு பயன்படுத்தலாம் அல்லது வீட்டிலேயே காயவைத்து அரைத்த மாவு பயன்படுத்தலாம்.
  • அரிசி மாவு விருப்பபட்டால் சேர்க்கலாம் அல்லது அரிசி மாவு சேர்க்காமலும் ராகி புட்டு செய்யலாம்.
  • தேங்காய் உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்து செய்யலாம், ராகிபுட்டு தேங்காய் அதிகம் சேர்த்தால்  சுவையாக இருக்கும்.
  • ராகி புட்டு வெந்தவுடன் ஓரத்தில் சிறிதளவு எடுத்து அதனை கைகளால் தொட்டுப் பார்க்கவும்,  கைகளில் ஒட்டாமல் இருந்தால் புட்டு வந்துவிட்டதாக அர்த்தம்.
  • ராகி புட்டுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் மற்றும் நெய் சேர்த்து சாப்பிடவும்.
  • ராகி மாவை ஈரம் செய்தவுடன் பிடித்து பார்க்கவும் பிடிக்க வராமல் உடைந்தால் மேலும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து  கலந்து கொள்ளவும்,  அதிக ஈரம் இருந்தால் மேலும் சிறிதளவு மாவு சேர்த்து கலக்கவும்.
  • ராகி மாவில் தண்ணீர் சேர்த்து கலந்த பின்னர் சிறு சிறு கட்டிகள் உடைந்துவிடும் அல்லது பெரிய ஓட்டை உள்ள சல்லடையில் சேர்த்து சலிக்கவும்.

இதர வகைகள் – வேர்க்கடலை சட்னி, பூண்டு இட்லி பொடி,  இட்லி மிளகாய் பொடி, வெங்காய சட்னி, கமகமக்கும் புதினா சட்னி, பீர்க்கங்காய் துவையல், ஹோட்டல் சுவையில் தேங்காய் சட்னி, இஞ்சி சட்னி, புதினா சட்னி, பூண்டு தக்காளி தொக்கு , தக்காளி சட்னி , பருப்பு துவையல்.

இதர இனிப்பு வகைகள் –பிரட் குலாப் ஜாமுன், கோதுமை ரவை கேசரி, காசி அல்வா, மால்புவா, கோதுமை அல்வா, குலாப் ஜாமுன், ரவா லட்டு, இனிப்பு காஜா, கடலை பர்ஃபி, ரவா  இனிப்பு அப்பம், கோவில் சக்கரை பொங்கல், ரசமலாய், நெய்யப்பம்.

 

See this Recipe in English

ராகி புட்டு செய்ய தேவையான பொருட்கள்

  • ராகி மாவு –  1 கப் (150g)
  • பச்சரிசி மாவு –  ¼  கப் (40g)
  • உப்பு –  ¼ தேக்கரண்டி/ தேவைக்கேற்ப
  • தேங்காய் – 1  கப்

 செய்முறை

1. ஒரு பவுலில் 1 கப் ராகி மாவை எடுத்துக் கொள்ளவும்.

2. அதனுடன் 1/4 கப் பச்சரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்.

3. 1/4 தேக்கரண்டி அல்லது தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

4. சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து ஈர மணல் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

5. உதிர் உதிராக மாவைத் தயார் செய்து கொள்ளவும் சிறு கட்டிகள் இருந்தால் உடைத்து விடவும் அல்லது சலித்து எடுத்துக் கொள்ளவும்.

6. ஒரு சிறிய கிண்ணத்தில் 2 முதல் 3 தேக்கரண்டி துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.

7. பின்னர் 2 – 3 தேக்கரண்டி மாவு சேர்த்துக் கொள்ளவும். கிண்ணம் நிறையும் வரை இதே போல செய்யவும்.

8. கடைசியாக மேலே தேங்காய் வைத்து லேசாக அழுத்தி விடவும்.

9. ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து சூடானதும் ஒரு ஸ்டீமர் தட்டு அல்லது ஒரு ஸ்டாண்டின் மீது தட்டி வைக்கவும்.

10. பின்னர் தயார் செய்து வைத்துள்ள  புட்டு கிண்ணத்தை அதனுள் வைக்கவும்.

 

11. மூடி வைத்து 10 முதல் 12 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

12. 12 நிமிடங்களுக்குப் பின்னர் ஓரத்தில் இருந்து எடுத்து தொட்டு பார்க்கவும் கைகளில் ஒட்டாமல் வந்தால் புட்டு தயாராகிவிட்டது,  இலையில் சிறிது நேரம் வேக வைக்கவும்.

13. சுவையான ராகி புட்டு தயார்.

Leave a Reply